| உதிரத்தை உறைய வைக்கும் ஒரு உண்மைச் செய்தி :
தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது கடையநல்லூர். இதன் அருகில் காசிதர்மம் என்ற கிராமம் உள்ளது.
பல மாதங்களுக்குமுன் இங்கு ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மரணம் அடைந்தார். அவரை இடுகாட்டில் எறித்துவிட்டு திரும்பினர் ஊர்மக்கள். இரவு ஒரு மணி அளவில் எறியூட்டிய பிணம் சரியாக எறிகிறதா இல்லை நெருப்பில் தெறித்து விழுந்திருக்கிறதா என்று கண்டு வருவதற்காக சிலர் இடுகாட்டிற்குச் சென்றிருக்கிறார்கள். அங்கே எறியூட்டப்பட்ட சடலத்திற்கு அருகில் நான்குபேர் அமர்ந்திருப்பதைக் கண்டனர். பிணத்தைச் சுற்றிப் பேய்கள் கூடி கும்மியடிக்கிறதோ! இதயம் வினாடிக்கு இருநூறு முறை படபடக்க அடிமேல் அடியெடுத்து வைத்து அருகில் சென்றனர்.
அமர்ந்திருந்தது பேய்கள் அல்ல மனிதப் பிசாசுகள்.
அவர்கள் யார்? இங்கே என்ன செய்கிறார்கள்? என்று பார்த்தால் .....
இரவு விருந்து நடத்திக் கொண்டிருந்தார்கள். என்ன விருந்து தெரியுமா? சிக்கன் 65 அல்ல மானிடன் 65. நான்கு பேரும் எறிந்து கொண்டிருந்த பிணத்தின் அங்கங்களைப் பிய்த்து எடுத்து மசாலா தடவி ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இவர்கள்தான் மனிதவடிவில் உள்ள மிருகங்களா? நால்வரையும் பிடித்து விசாரித்ததில்தர்ன தெரிந்தது இடுகாட்டில் பிணம் வரும் நாளெல்லாம் இவர்களுக்கு விருந்தாக அமைகிறது என்பது. அப்புறம் என்ன சரியான முறையில் கவனித்து காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டார்கள். இதோடு முடிந்ததா என்றால் அதுதான் இல்லை. சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த அந்த பிணம் தின்னிகள் இப்பொழுது அந்தப் பகுதியிலும் அதற்கு அருகில் உள்ள ஊர்களிலும் மக்களைப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். யாராவது தனியே சென்றால் விரட்டுவது. இரவில் ஒளிந்து ஒளிந்து வருவது என்று பேயாய் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்படி ஒரு ஊரில் அலைந்த ஒருவனை அந்த ஊர்மக்கள் பிடித்து கட்டி வைத்து நையப்புடைத்தனர். அவனிடம் டார்ச் விளக்கு கத்தி தீப்பெட்டி வத்தல் பொடி இப்படி பல பொருட்கள் இருந்திருக்கின்றன. இந்தக் கொடூரர்களின் பெயரால் இப்பொழுது பல வதந்திகளும் பன்றிக் காய்ச்சல்போல் பரவி வருகின்றன. விண்ணில் நடந்தாலும் மண்ணைத்துளைத்து மறுபக்கம் சென்றாலும் ஆதிகால மனித வாழ்வை நினைவுறுத்தத்தான் இப்படிப்பட்ட மனிதர்களை இறைவன் படைக்கிறானோ! |
0 comments:
Post a Comment