Custom Search

புரட்சிகரமான அறுவைச் சிகிச்சை மூலம் பார்வையை மீளப்பெற்ற நபர்
lankasri.comபார்வையிழந்த நபரொருவருக்கு அவரது முரசினூடாக மேற்கொண்ட புரட்சிகரமான அறுவைச் சிகிச்சை மூலம் பார்வையை மீளப்பெறச் செய்து பிரித்தானிய மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

மார்ட்டின் ஜோன்ஸ் (42 வயது) என்ற இந்த நபர், 12 வருடங்களுக்கு முன் உலோகப் பட்டறையொன்றில் பணியாற்றுகையில் உருகிய அலுமினியத்தைக் கொண்ட குழாயொன்று வெடித்துச் சிதறியதில் பார்வையை முற்றுமுழுதாக இழந்தார்.

இந் நிலையில், அவரைப் பராமரிக்க நியமிக்கப்பட்ட பெண்ணான கில்லை (50 வயது) நான்கு வருடங்களுக்கு முன்னர் மணந்தார்.

விபத்து நடைபெற்ற போது 600 பாகை செல்சியஸ் வெப்பநிலையிலிருந்த திரவ அலுமினியம் வெடித்துச் சிதறியதில் அவருக்குப் பாரிய எரிகாயங்கள் ஏற்பட்டன. 23 மணி நேரம் அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த அவரது இடது கண் முற்றாக அகற்றப்பட்டது. அவரது வலது கண் அகற்றப்படாத போதும் அது பார்வைப்புல ஆற்றலை இழந்திருந்தது.

இந் நிலையில் மருத்துவர்கள் மார்ட்டினின் பற்களில் ஒன்றை அகற்றி, முரசினூடாக சிறிய துளை இட்டு விசேட பார்வை வில்லைகளை அவரது வலது கண்ணில் பொருத்தி அவருக்கு அக் கண்ணிலான பார்வைப் புலத்தை மீளக் கிடைக்கச் செய்துள்ளனர். அத்துடன் அவரது அகற்றப்பட்ட பல்லும் வெற்றிகரமாக மீளவும் உரிய இடத்தில் பொருத்தப்பட்டது.

இது தொடர்பில் மார்ட்டின் விபரிக்கையில்,

"நான் குருடாக இருந்தபோதே எனது மனைவியைச் சந்தித்தேன். அவர் முகத்தைப் பார்க்கவேண்டுமென்பதே எனது தீவிர ஆவலாக இருந்தது. மருத்துவர்கள் கண் கட்டை அவிழ்த்ததும் எதிரே நின்ற அவரை (மனைவியை) பார்க்க முடிந்தது. என்னால் நம்ப முடியவில்லை. கில் மிகவும் அழகாக இருக்கிறார். எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி உணர்வை விபரிக்க வார்த்தைகளில்லை" என்று கூறினார்

0 comments:

விடுப்பு செய்திகள்

Ihr Browser unterstützt Inlineframes nicht oder zeigt sie in der derzeitigen Konfiguration nicht an.